Wednesday, December 31, 2008


this was a spl one 4 new year

this was a spl one... i am never used to puttin colours...
anyway let d comin year be colourful as this
HAPPY NEW YEAR!!!!

this was a recent one.....

i liked this one....

jus an usual one!!!!



this is an ordinary one... was gettin late 4 col so couldn put somethin better...:-(

Thursday, December 25, 2008

Sunday, December 21, 2008

Friday, December 19, 2008

another one... actually this was d first....


kolam!!!!

i jus love kolamm.... n tis is jus one tat i put for tis margazhi!!!

Friday, August 1, 2008

சுமையா?

வருந்தினேன் குழந்தை தொழிலாளியின் தலையில் இருக்கும் சுமையை கண்டு;
மறுகணமே கண்டேன் கான்வென்ட் மாணவனின் முதுகில் இருக்கும் சுமையை;
யாருக்கு தான் இல்லை வாழ்கையில் சுமைகளும் சோகங்களும்;
வாழ்கையில் வெற்றியின் அளவு சுமைகளை பொருத்ததன்று
அதை சுமக்க எடுக்கப் படும் முயற்சியினை பொருத்ததாகும்;
சுமப்போம் சுமைகளை, சுகமாக்குவோம் வாழ்கையை!!!!

Friday, April 18, 2008

எதிர்பார்கிறேன்.....

நீ இளைப்பாறும் நாட்களில் என்னுடன் கழிக்கும் ஒரு மணி நேரம் அல்ல......
உன் தலைக்கு மேல் வேலை இருக்கும் அந்த சில நாட்களில் உன் நினைவை என் முகம் கடந்து செல்லும் அந்த ஒரு நிமிடம்.....
பல நூறு ரூபாய் செலவில் உன் அன்பை பொழிய நீ தரும் பரிசுகள் அல்ல..... உன் கண்களில் என்றும் எனக்காக தோன்றும் அந்த பரிவு....
என் இன்பத்தருணங்களில் என்னை கட்டி அணைக்க நீட்டப்படும் உன் கரங்கள் அல்ல.....
என் துன்பத்தை துடைக்க எனக்காக காத்திருக்கும் உன் தோள்கள்....
என் ego வை தோற்கடிக்கும் உன் அன்பு....
என் தப்பைத் தட்டி கேட்க நீ என் மேல் ஏடுத்து கொள்ளும் உரிமை....
என் ஒவ்வொரு வெற்றியை கண்டு உன் உள்ளத்தில் தோன்றும் உண்மையான நெகிழ்ச்சி....
என் சிறு சிறு தோல்விகளுக்கும் உன்னுள் தோன்றும் துடிப்பு....
மனம் விட்டு பேசிய அந்த பல மணி நேரங்கள்....
சலிக்காத அந்த சின்ன சண்டைகள் இவை அனைத்தும் மேம்மேலும் எனக்கு கிடைக்க
காத்திருக்கிறேன்....
எதிர் பார்த்திருக்கிறேன்.....
இவற்றில் எது இல்லா விட்டாலும் நான் உன்னுடன் இருப்பேன்...
-உன் உயிர் தோழியாக....
ஏனெனில் எதிர்பார்ப்பின்றி வருவதே நட்பு என்று எவரோ கூறியது என் நினைவை முட்டியது...
சிறிது நேரம் சிந்தித்தேன்.....
ஆம் எதிர்பர்பின்றி ஓடும் வாழ்க்கை ஏமாற்றத்தை தராது.....
ஆனால் உண்மை அது எழுச்சியையும் தராது...
நினைவிருக்கட்டும்....என் அன்பு மழைக்கு உன் நெஞ்சில் என்றும் பஞ்சம் வராது...
மேற்கூறிய எதிர்பார்ப்புகள் என் நட்பிற்கு நான் கேட்கும் பதில் மரியாதை அல்ல...
நம் உறவின் எழுச்சிக்காக நான் இடும் கட்டளை...
மரியாதையாக அடிபணிந்து போ.....
-இப்படிக்கு
என்றும் உன்னை தொல்லை படுத்த துரத்தும்
உன் உயிர் தோழி
பூர்ணி:-):-):-)

Wednesday, April 16, 2008

என் அம்மாவிற்காக.....

விடியல் தொட்டு பார்த்தும் சலிக்காதமுகம்.....


உதட்டோடு என்றும் ஒட்டிய புன்னகை.....(என்னை அர்ச்சிக்கும் பொழுது sorry- இது போகும் இடம் எனக்கும் தெரியாது )


ஆயிரம் வேலைக்கு இடையேயும் என்னுடன் அரட்டைக்கு ஆர்வம்.....


எனக்காக என் தப்புகளை தானதாக்கிக் கொள்ளும் உயர்ந்த உள்ளம்


பல நூறு சோகங்களுக்கு இடையேயும் என்னை சாந்தப் படுத்தும் அவளின் மடி...



என் ஒவ்வொரு அசைவும் அவள் நினைவில் அத்துப்படி....

இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் என்றோ படித்த sms என் நினைவை முட்டியது......

"ஆம் நான் கண்டவுடன் காதலை நம்புகிறேன்.... ஏனெனில்.....நான் பிறந்த அந்நாளில் இருந்தே என்னைத் தொட்டுத் தூக்கிய தாய்யை காதலிக்கிறேன்!!!! "
ஆம் நான் கதை கேட்ட அந்நாளில் இருந்து

அவளோடு நான் கதை அடிக்கும் இன்று வரை....

என் வாழ்வில் பல்வேறு பாத்திரங்கள் கொண்ட பெருமை அவளை மட்டுமே சேரும்....

என் வெற்றிகளுக்கு மனமார மகிழ்ந்து...

என் தோல்விகளின் பொழுது தட்டிக் கொடுத்து....

நான், நானாக இருக்கையிலேயே என் மேல் அளவில்லா அன்புக் கொண்டவள்.....

என்னை கண்டு அவள் சிந்திய ஓரிரு துளி ஆனந்தக்கண்ணீர்....

உதட்டில் சிரிபோடும் கண்களில் கண்ணீரோடும் என்னை கட்டி அணைத்த சில தருணங்கள்...

என் தாய் என் உயிர் தோழியாக உருக்கொண்ட பல சம்பவங்கள்.....

இவை அனைத்தையும் என் நெஞ்சில் சுமந்துக் கொண்டு....

தாயே..... உனக்காக இறுதியாக இரு வரிகள்...

"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,உன்னை கை விடுவதும் இல்லை!!!!"

I JUS STARTED BLOGGING!!!!

Hi ppl,
this is poorni..... i jus started bloggin... hope i enjoy it...
life s beautiful!!!
enjoy it!!!
cheers!!!